ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஜினி நடிக்கும் 169வது திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கவுள்ளார்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் வில்லனாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஸ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கவிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சினிமா வட்டார செய்திகள் தெரவிக்கின்றன.
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளமை சினிமா வட்டாரங்களையும் ரஜினி ரசிகர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
ஜெயிலர் படத்தின் தலைப்பில் தற்போது மலையாளத்தில் புதிய படம் ஒன்று எடுக்கப்பட்டு விரைவாக படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் ரஜினி நடிக்க இருக்கும் ஜெயிலர் திரைப்படம் மலையாளத்தில் வெளியிடப்படும் போது தலைப்பு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு தலைப்பு பிரச்சினை ஏற்படுமாக இருந்தால் மலையாளத்தில் வெளியிடும் போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திற்கு மலையாளத்தில் வேறு பெயர் மாற்ற வேண்டிய நிலையேற்படலாம் என கூறப்படுகிறது.
Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, கேரளா, தமிழ்நாடு, சென்னை